சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளின் விரிவான வலையமைப்பின் எச்சங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த இடம் இலங்கையைச் சுற்றி வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.
தனது தந்தையைக் கொன்ற முதலாம் கஸ்ஸப மன்னரால் கட்டப்பட்ட சிகிரியா நகரத்தின் இடிபாடுகள் கடல் மட்டத்திலிருந்து 370 மீட்டர் உயரமுள்ள மலைச் சரிவில் அமைந்துள்ளன. இந்த சிகரம் லயன் ராக் என்று அழைக்கப்படுகிறது மற்றும் எல்லா பக்கங்களிலும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. நகரத்தின் நுழைவாயில் ஒரு சிங்கத்தின் பெரிய வாயாக இருந்தது... அதில் இப்போது பாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இலங்கையின் முதன்மை சுற்றுலா இடங்களில் ஒன்று சிகிரியா. இதை Laion Rock என ஆங்கிலத்தில் அழைப்பர். இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்ட பகுதியில் (Matale District) இது உள்ளது. உலக Heritage Siteகளில் ஒன்றான இதில் உள்ள ஓவியங்கள் உலக பிரசித்தம். இந்த ஓவியங்கள் இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள (Ajanta Caves) ஓவியங்களை ஒத்தது. இதை காசியப்ப அரசன் கி.பி. 477-495 ஆண்டு வரையான காலங்களில் நிர்மாணம் செய்ததாக கூறப்படுகிறது. காசியப்பனின் மறைவின் பின் இது புத்த துறவிகள் தங்குமிடமாக மாறியது.
தனது தந்தை தாதுசேனாவை (Dhatusena) உயிருடன் சுவரில் புதைத்து கொலை செய்தபின் ஆட்சியை கைப்பற்றிய காசியப்பன் அதுவரை தலைநகராக இருந்த அனுராதபுரத்தை கைவிட்டு சிகிரியாவை தலைநகர் ஆக்கினார். 495 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து உதவிகளுடன் மீண்டு வந்து காசியப்பனை வென்ற காசியப்பனின் சகோதரன் மொகலாலன் மீண்டும் அனுராதபுரத்தை தலைநகர் ஆக்கினார். இதன்பின் 16ஆம் 17ஆம் நூற்றாண்டுகளில் இது கண்டி இராச்சியத்தின் பாகமானது.
சுமார் 470 மீட்டர் உயரமான இந்த சிங்க வடிவிலான பாறையின் உச்சத்தில் ஒரு அரண்மைக்கு தேவையான எல்லா வசதிகளும் உண்டு. சுற்றாடல் பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் வரை உயரமான இது UNESCOவின் World Herritage Centre தராதரம் பெற்ற ஒரு சின்னமாகும்.
சுமார் 1.5 hectares (15,000 square meters) பரப்பளவு கொண்ட இந்த பாறையின் உச்சத்தில் குடைந்தெடுத்து உருவாக்கப்பட்ட தடாகம் மட்டும் சுமார் 27 மீட்டர் நீளமும் 21 மீட்டர் அகலமும் கொண்டது.